மிதக்கும் வடமாநிலங்கள்

மிதக்கும் வடமாநிலங்கள்

1 mins read
842df4b2-ea0c-47ac-859a-5e28506a9592
-

புது­டெல்லி: வட­மா­நி­லங்­களில் அண்­மைய சில தினங்­க­ளாக பெய்த கன­மழை கார­ண­மாக லட்­சக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். பொது­மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்­ளது.

இந்­நி­லை­யில் குஜ­ராத், மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான், சட்­டீஸ்­கர் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளுக்கு கன­மழைக்­கான சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­நி­லங்­களில் கடும் மழைப்­பொ­ழிவு கார­ண­மாக மீண்­டும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­ட­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டின் மத்­திய மற்­றும் மேற்கு பகு­தி­களில் திங்­கட்­கி­ழமை தொடங்கி கன­மழை பெய்­யக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்­கி­டையே வங்­காள விரி­குடா­வில் புதிய காற்­ற­ழுத்த தாழ்­வு­நிலை உரு­வாகி உள்­ளது. எனி­னும் இது தீவிர தாழ்­வு­நி­லை­யாக மாற வாய்ப்­பில்லை என்று வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது.

மத்­தி­யப் பிர­தேச தலை­நகர் போபாலை கன­மழை புரட்டிப் போட்­ட­தால் தாழ்­வான பகுதி­களில் உள்ள வீடு­கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

படம்: இபிஏ