பிபின் ராவத்: சீனாவுடன் பேச்சு தோல்வி அடைந்தால் ராணுவ நடவடிக்கை

பிபின் ராவத்: சீனாவுடன் பேச்சு தோல்வி அடைந்தால் ராணுவ நடவடிக்கை

2 mins read
04cddd5a-94a7-4b69-a091-601250ca2900
இந்­திய பாது­காப்­புப் படைத் தலை­வர் பிபின் ராவத். படம்: ஊடகம் -

புது­டெல்லி: எல்­லை­யில் நிக­ழும் அத்­து­மீ­றல்­கள் ஊடு­ரு­வல்­க­ளாக மாறு­வ­தைத் தடுப்­ப­தற்கு உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக இந்­திய பாது­காப்­புப் படைத் தலை­வர் பிபின் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், எல்­லைப் பிரச்­சினை குறித்து சீனா­வு­டன் நடத்­தப்­படும் பேச்­சு­வார்த்தை தோல்வி அடைந்­தால் ராணுவ நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் எனத் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டார்.

சனிக்­கி­ழ­மை­யன்று தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத்­சிங் தலை­மை­யில் எல்லை விவ­கா­ரம் குறித்து ஆலோ­சனை நடை­பெற்­றது. இதில் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரும் முப்­ப­டைத் தள­ப­தி­களும் பங்­கேற்­ற­னர்.

இதை­ய­டுத்து லடாக்­கில் சீன ராணு­வத்­தின் அத்­து­மீ­றல்­க­ளைக் கையாள்­வ­தற்­கான ராணு­வத் திட்­டம் ஒன்று இந்­திய ராணு­வத்­தின் பரி­சீ­ல­னை­யில் இருப்­ப­தாக பாது­காப்­புப் படை தலை­வர் ஜென­ரல் பிபின் ராவத் தெரி­வித்­தார்.

"எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கோட்­டுப் பகு­தி­யில் நிக­ழும் வரம்பு மீறல்­கள், அதன் சீர­மைப்பு தொடர்­பான மாறு­பட்ட கருத்­து­க­ளால் ஏற்­ப­டு­கின்­றன. எனவே, எல்­லைப் பகு­தி­யில் கண்­கா­ணிப்பை மேற்­கொள்­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

"இது­போன்ற செயல்­பா­டு­க­ளைத் தடுப்­ப­தற்கு அர­சாங்­கம் சில அணு­கு­மு­றை­க­ளைப் பின்­பற்­றும். எல்­லை­யில் இயல்பு நிலையை மீட்­டெ­டுப்­ப­தற்­கான முயற்­சி­கள் வெற்றி பெறா­விட்­டால் நாட்­டின் பாது­காப்பு அமைப்­பு­கள் ராணுவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்," என்­றார் ஜென­ரல் பிபின் ராவத்.

ராணுவ நடவடிக்கைக்குப் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதுமே தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே திடீர் மோதல் வெடித்தது. இதில், இந்தியத் தரப்பில் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத்தரப்பில் உயிரிழப்பு இரட்டிப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பின்னர் எல்லையிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன. எனினும் பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் எல்லையில் சீனா பல்வேறு கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியத் தரப்பு அதிருப்தி அடைந்திருக்கிறது.