ஆயுர்­வே­தத்தை ஊக்குவித்து இயற்கை மருத்துவம் புறக்கணிப்பு

1 mins read
965e17ba-cea1-4fba-bca5-a58ddf889d82
கோப்புப்படம் -

புது­டெல்லி: இணை­யம் வழி நடை­பெற்ற கூட்­டத்­தின்­போது இந்தி தெரி­யாத தமி­ழ­கத்­தைச் சேர்ந்த ஆயுர்­வேத மருத்­து­வர்­கள் வெளி­யே­ற­லாம் என்று மத்­திய ஆயுஷ் அமைச்­சின் செய­லர் வைத்ய ராஜேஷ் மிரட்­டல் தொனி­யில் கூறி­யது மொழி அர­சி­ய­லாக உரு­வெ­டுத்­துள்­ளது.

வைத்ய ராஜே­ஷின் செயல்­பாட்­டுக்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் ஆயுஷ் அமைச்­சின் செய­லர் பத­வி­யில் இருந்த ஐஏ­எஸ் அதி­காரி அகற்­றப்­பட்டு வெறும் ஆயுர்­வேத மருத்­து­வ­ரான வைத்ய ராஜேஷை நிய­மித்­த­து­தான் தற்­போது உரு­வான பிரச்­சி­னைக்கு கார­ணம் என இந்­திய இயற்கை மருத்­து­வம் மற்­றும் யோகா பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தின் துணைத் தலை­வர் செளந்­தர பாண்­டி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இத­னால் வைத்யா ராஜேஷ் ஆயுர்­வே­தத்தை அதி­கம் ஊக்­கு­வித்து மற்ற மருத்­து­வ­மு­றை­க­ளைப் புறக்­க­ணிப்­ப­தாக அவர் சாடி­யுள்­ளார்.

"யோகா மற்­றும் இயற்கை மருத்­துவ முறை­யில் தமி­ழர்­கள் அதி­கம் ஈடு­பட்­டுள்­ள­னர். இந்­நி­லை­யில் யோகாவை மட்­டும் பிரிக்க முற்­ப­டு­கி­றார் வைத்ய ராஜேஷ். கொரோனா விவ­கா­ரத்­தில் எங்­கள் பணியை அவர் துளி­யும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை," என்று சவுந்­த­ர­பாண்­டி­யன் தெரி­வித்­துள்­ளார்.

வைத்ய ராஜேஷ் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று தமி­ழக எம்­பிக்­கள் வலி­யு­றுத்தி உள்ள நிலை­யில் இணை­யம் வழி நடந்த கூட்­டத்­தில் தாம் இந்­தி­யில் ஆற்­றிய உரை ஆங்­கி­லத்­தி­லும் முழு­மை­யாக விளக்­கிக் கூறப்­பட்­ட­தாக வைத்ய ராஜேஷ் தெரி­வித்­துள்­ளார்.

தமது பேச்சு கணினி மூலம் மாற்­றப்­பட்டு சமூக வலைத்­தளங்­களில் வெளி­யாகி உள்­ளது என்­றும் இதன்­மூ­லம் மொழிப் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிப்­ப­தா­க­வும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

"