தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் உயரமான ரயில் மேம்பாலம்

1 mins read
33f355ca-bdaf-4ce0-a1ca-43aa74bd6d7c
புதிதாக கட்டப்படும் மேம்பாலம். படம்: ஊடகம் -

புது­டெல்லி: உல­கின் உய­ர­மான ரயில்வே மேம்­பா­லம் காஷ்­மீ­ரில் அமைய உள்­ளது. இதற்­கான பணி­கள் 2022ஆம் ஆண்­டுக்­குள் நிறை­வ­டை­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரிஸ் நக­ரில் உள்ள ஈஃபிள் கோபு­ரத்தைவிட 35 மீட்­டர் உய­ரத்­தில், செனாப் ஆற்­றின் மீது இந்த ரயில்வே மேம்­பா­லம் அமைக்­கப்­ப­டு­கிறது. இதன்­மூ­லம் காஷ்­மீர் பள்­ளத்­தாக்கு, ஜம்மு மற்­றும் நாட்­டின் பிற பகு­தி­க­ளு­டன் இணைக்­கப்­படும்.

இந்­தப் பாலம் கட்­டப்­பட்­ட­பின் சுற்­றுலாப் பய­ணி­க­ளின் வருகை அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சுமார் 1.3 கி.மீ. தூரத்­துக்கு அமைக்­கப்­படும் இந்­தப் பாலம் ரிக்­டர் அள­வில் 7 புள்­ளிக்­கும் அதி­க­மா­கப் பதி­வா­கும் நில நடுக்­கத்­தைத் தாங்­கக்­கூ­டிய அள­வுக்கு உறு­தி­யான பால­மாக அமைக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.