ஜெய்சங்கர்: சீன உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது

1 mins read
2f1465fd-0782-45f7-a381-ccab9a546dac
ஜெய்சங்கர். படம்: ஊடகம் -

புது­டெல்லி: இந்­தியா சீனா இடை­யே­யான உறவு கடந்த 1962ஆம் ஆண்­டுக்­குப் பிறகு மிக­வும் மோச­டைந்து இருப்­ப­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

செய்தி ஊட­கம் ஒன்­றுக்கு அளித்­துள்ள பேட்­டி­யில், இரு­த­ரப்­பும் எல்­லை­யில் படை­க­ளைக் குவித்­தி­ருப்­பதை அவர் ஒப்­புக் கொண்­டுள்­ளார்.

தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் நாட்­டின் எல்­லை­க­ளைப் பாது­காக்க என்ன செய்ய வேண்­டுமோ அதை நிச்­ச­யம் செய்­யத்­தான் வேண்­டும் என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எல்லையில் அமைதியும் சமாதானமும் நிலவுவது இருதரப்பு உறவுகளைப் பொறுத்தே அமையும். இதை சீனாவிடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.

"கடந்த காலங்களில் இருதரப்பு ராணுவங்கள் தொடர்பான விவகாரங்களுக்கு ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் தீர்வு காணப்பட்டது. எல்லையில் தற்போது உள்ள நிலைமை மிகவும் தீவிரமான ஒன்று. கடந்த 1962ஆம் ஆண்டுக்குப் பிறகு இருதரப்பு உறவு மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது," என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கோட்­டில் இரு­த­ரப்­பும் இந்­த­ளவு ராணு­வத்­தைக் குவித்­தி­ருப்­ப­தும் முன்­பில்­லாத வகை­யில் எதிர்­பா­ராத ஒன்று என்று குறிப்­பிட்­டுள்ள அவர், 45 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு சீனா- இந்­தியா எல்­லை­யில் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

எனவே, எல்­லைப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண­வேண்­டும் என்­றால் இரு­த­ரப்­புக்கு இடை­யே­யான அனைத்து ஒப்­பந்­தங்­க­ளுக்­கும் புரி­தல்­க­ளுக்­கும் உரிய மரி­யாதை அளிக்­கப்­பட வேண்­டும் என்று ஜெய்­சங்­கர் மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

சீனா, இந்தியா இடையேயான எல்லை பிரச்சினை தீவிரமடைந்து வருகிறது.