சிங்கப்பூர்-இந்திய தற்காப்பு உறவை மேம்படுத்த கடப்பாடு

சிங்கப்பூர்-இந்திய தற்காப்பு உறவை மேம்படுத்த கடப்பாடு

1 mins read
c49675b9-455e-4584-b674-e2b3b85bbacc
இந்­தி­யா­வின் தற்­காப்புச் செய­லா­ளர் டாக்­டர் அஜய் குமா­ர். கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான தற்­காப்பு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான கடப்­பாட்டை இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த தற்­காப்பு அதி­கா­ரி­கள் வெளிப்­ப­டுத்தி உள்­ள­னர்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படைக்­கும் இந்­திய ஆயு­த­ப் படைக்­கும் இடை­யி­லான செய­லாக்க ஒத்­து­ழைப்­பின் அடிப்­ப­டை­யில் இது சாத்­தி­ய­மா­கும் என்­ற­னர் அவர்­கள்.

சிங்­கப்­பூர் நிரந்­த­ரச் செய­லா­ளர் (தற்காப்பு) சான் ஹெங் கீயும் இந்­தி­யா­வின் தற்­காப்பு செய­லா­ளர் டாக்­டர் அஜய் குமா­ரும் நேற்று பிற்­ப­க­லில் காணொளி வழியாகக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­யபோது இந்தத் தகவல்கள் வெளிப்பட்டன.

'ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் நிலை கூட்­டம்-பிளஸ்' கட்­ட­மைப்­பின்கீழ் வட்­டார பாது­காப்பு ஒத்­து­ழைப்பு குறித்த கருத்­து­க­ளை­யும் இரு­த­ரப்பு அதி­கா­ரி­கள் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

2015ஆம் ஆண்டு மேம்­ப­டுத்­தப்­பட்டு கையெ­ழுத்­தி­டப்­பட்ட இந்­தியா-சிங்­கப்­பூர் தற்­காப்பு ஒத்­து­ழைப்பு உடன்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் இரு நாடு­களும் வலு­வான, நீண்­ட­கால தற்­காப்பு உற­வு­க­ளைப் பகிர்ந்துகொண்டு வரு­கின்­றன.