மோடி: ஆயுத உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயம்

மோடி: ஆயுத உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிர்ணயம்

2 mins read
55a55364-d188-49c2-a903-4b66a678d0c7
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஊடகம் -

'பாதுகாப்புத்துறை உற்பத்தியில் 74% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி'

புது­டெல்லி: நாடு சுதந்­தி­ரம் அடைந்த பிறகு உள்­நாட்டு ஆயுத உற்­பத்­தி­யில் அதிக கவ­னம் செலுத்­தப்­ப­ட­வில்லை என பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

சுய­சார்பு இந்­தியா திட்­டத்­தின் மூலம் நாட்­டின் ஆயுத உற்­பத்­தியை அதி­க­ரிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

பாது­காப்­புத் துறை­யில் தன்­னி­றைவு அடை­வது தொடர்­பான கருத்­த­ரங்கு காணொளி வசதி மூலம் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர் மோடி, உல­கில் அதி­க­ள­வில் ஆயு­தங்­களை இறக்­கு­மதி செய்­யும் நாடு­களில் இந்­தி­யா­வும் ஒன்று என்­றார்.

மத்­தி­யில் பாஜக அரசு அமைந்­த­பி­றகு உள்­நாட்­டி­லேயே ஆயு­தங்­கள், பாது­காப்­புத் தள­வா­டங்­கள் தயா­ரிக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், 101 வகை­யான பாது­காப்­புத் தள­வா­டங்­களை இறக்­கு­மதி செய்ய அண்­மை­யில் தடை விதிக்­கப்­பட்­ட­தைச் சுட்­டிக் காட்­டி­னார்.

பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 74 விழுக்காடு அந்நிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

"ஆயுத உற்­பத்­தியை அதி­க­ரிக்க, புதிய தொழில்­நுட்­பங்­களை உரு­வாக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கிறது. இதில் தனி­யார் நிறு­வ­னங்­க­ளின் பங்­க­ளிப்­பும் வர­வேற்­கப்­ப­டு­கிறது.

"பாது­காப்­புத் துறை­யில் தன்­னி­றைவு அடைந்­தால் உல­க­ளா­விய அமைதி மற்­றும் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இந்­தியா முக்­கிய பங்­காற்ற முடி­யும்," என்­றார் பிர­த­மர் மோடி.

பாது­காப்­புத் துறை­யில் பல்­வேறு சீர்­தி­ருத்­தங்­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பாக முப்­ப­டை­க­ளுக்கு தலை­மைத் தள­பதி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார் என்­றும் அவர் குறிப்­பிட்­டார். தமி­ழ­கத்­தி­லும் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தி­லும் பாது­காப்பு தொழில் வழித்­த­டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அடுத்த ஐந்து ஆண்­டு­களில் பாது­காப்­புத் துறை­யில் இரு­பது ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­படும் என்­றார்.

"பாது­காப்­புத் துறை சார்ந்த திட்­டங்­களை விரை­வு­ப­டுத்த சிவப்பு நாடா முறை ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. மத்­திய பாது­காப்பு ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்டு நிறு­வ­னம் 108 வகை­யான பாது­காப்­புத் தள­வா­டங்­களை உற்­பத்தி செய்­யும் திட்­டத்தை தொடங்­கி­யுள்­ளது," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­தார்.

எதிர்­கா­லத்­தில் இந்­தி­யா­வும் ஆயு­தங்­களை ஏற்­று­மதி செய்­யும் என்­றும் அப்­போது நட்பு நாடு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்­றும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.