தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தட்டிக்கழிக்கும் பாகிஸ்தான்: இந்தியா கடும் அதிருப்தி

1 mins read
de608bdd-f181-4738-ad36-454952c45963
ஸ்ரீநகரின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமா மாநிலத்தில் ஜூன் 19ஆம் தேதி துப்பாக்கிச் சண்டை நடந்த மீஜ் பாம்போர் வட்டாரத்தில் இந்திய ராணுவத்தினர் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎப்பி -

புது­டெல்லி: புல்­வாமா தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பில் பாகிஸ்­தான் உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை என இந்­தியா குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

தனக்­குள்ள பொறுப்பை அந்­நாடு தட்­டிக் கழிப்­ப­தாக இந்­திய வெளி­யு­றவு அமைச்சு கூறி­யுள்­ளது.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அந்த அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவத்­சவா, புல்­வாமா தாக்­கு­தல் தொடர்­பான ஆதா­ரங்­கள் அனைத்­தும் பாகிஸ்­தா­னுக்கு அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டார்.

"இதன்­பி­ற­கும் பாகிஸ்­தான் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதே­போல் கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தாக்­கு­த­லுக்கு கார­ண­மா­ன­வர்­கள் மீதும் பாகிஸ்­தான் நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை. தாவுத் இப்­ரா­கிம் விஷ­யத்தில் அந்­நாடு மாற்­றிப் பேசு­கிறது," என்­றார் அனு­ராக் ஸ்ரீவத்­சவா.

பயங்­க­ர­வாத இயக்­கங்­கள் மீதோ, தேடப்­படும் தனிப்பட்டவர்கள் மீதோ பாகிஸ்­தான் நம்­ப­க­மான எந்த நட­வ­டிக்­கை­யை­யும் இது­வரை எடுத்­த­தில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இனி பாகிஸ்­தா­னால் உல­கத்­தைத் திசை திருப்ப முடி­யாது என்­றார்.

"புல்­வாமா தாக்­கு­த­லுக்கு ஜெய்ஷ்-இ-முக­மது இயக்­கம் பொறுப்­பேற்­றுள்­ளது. அதன் தலை­வர்­கள் பாகிஸ்­தா­னில்­தான் உள்­ள­னர். முதல் குற்­ற­வா­ளி­யான மசூத் அசா­ருக்கு பாகிஸ்­தான் தொடர்ந்து அடைக்­க­லம் அளித்து வரு­கிறது. புல்­வாமா தாக்­கு­தல் தொடர்­பாக ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார் அனு­ராக் ஸ்ரீவத்­சவா.