புனே: கொரோனா கிருமித்தொற்றால் உடல்நலம் மோசம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த 71 வயது நோயாளியை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்ற உந்துதலில், மருத்துவர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக மாறி அந்த வாகனத்தை ஓட்டிச்சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேயில் நடந்துள்ளது.
மருத்துவர்களின் துடிப்புமிக்க இந்த மனித நேயச் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புனே பகுதியில் உள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 14ஆம் தேதிமுதல் 71 வயது நோயாளி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திடீரென அவரது ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர்.
அப்போது ரஞ்சித் நிகம், 35, என்ற மருத்துவர் பணியில் இருந் தார். அவர் பணியாற்றும் சிகிச்சை மையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவராலும் வர முடியவில்லை. வேறு ஆம்பு லன்ஸ் வசதியும் கிட்டவில்லை.
இதையடுத்து, மருத்துவர் ரஞ்சித் நிகம், கொரோனா நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றி, தானே ஆம்புலன்சை ஓட்டிச்சென்று அவ ரது உயிரைக் காப்பாற்றி உள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ரஞ்சித் நிகம் கூறுகையில், “வழக்கமாக நான் ‘பவர் ஸ்டியரிங்’ வாகனங்கள்தான் ஓட்டி உள்ளேன். ஆம்புலன்ஸ் வேன் பழைய வாகனம் என்பதால் ஓட்டுவதற்கு சற்று கடினமாக இருந்தது,” என்றார்.
“இந்த டாக்டர்கள்தான் உண்மையான கொரோனா போராட்ட வீரர்கள். டாக்டர்கள் ஆம்புலன்சை மட்டும் ஓட்டிச் செல்லவில்லை. இரண்டு மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் கடைசியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து எனது தந்தையின் உயி ரைக் காப்பாற்றிவிட்டனர்,” என்று அவரது மகன் கூறினார்.
மருத்துவர் ரஞ்சித் நிகம், மருத்துவர் ராஜ் புரோகித்துடன் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளியைக் காப்பாற்ற ஆம்புலன்சை ஓட்டிச் செல்கிறார். படம்: ஊடகம்
நோயாளியின் உயிரைக் காப்பதில்தான் மகிழ்ச்சி உள்ளது. எனவேதான் தாமதிக்காமல் ஆம்புலன்சை ஓட்டிச்சென்றேன்.
மருத்துவர் ரஞ்சித் நிகம்