புதுடெல்லி: பணமதிப்பிழப்பு, பொருள் சேவை வரியான ஜிஎஸ்டி, ஊரடங்கு ஆகிய இந்த மூன்று காரணங்களால்தான் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட் வழி பதிலடி தந்துள்ளார்.
"கொரோனா கிருமிப் பரவலால் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது கடவு ளின் செயல்," என நிர்மலா சீதா ராமன் நேற்று முன்தினம் கூறினார். நிதி அமைச்சரின் இந்தப் பேச்சு நாடெங்கும் உள்ள அரசியல் பிரமுகர்களிைடயே கடும் விவாதத்தை கிளப்பி விட்டது.
இந்நிலையில், "மத்திய அமைச் சரின் கூற்றில் உண்மையில்லை. நாட்டின் பொருளாதாரம் மூன்று செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழித்தது, குறைபாடு உள்ள ஜிஎஸ்டியை அமல்படுத்தியது, ஊரடங்கை கையாள்வதில் தோல்வியடைந்தது. இவை மூன்றும் சேர்ந்தே பொருளாதாரப் பாதிப்பிற்கு வழி வகுத்துள்ளன," என்று ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

