ஒடிசா கனமழைக்கு 12 பேர் பலி

1 mins read
310e2fa3-2fba-4c7a-8f5a-fb837feb81e0
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் நகரில் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. படம்: இபிஏ -

புவ­னேஸ்­வர்: ஒடி­சா­வில் தொடர்ந்து பெய்து வரும் கன­மழை கார­ண­மாக, வீடு­கள் தண் ­ணீ­ரில் மூழ்கி இடிந்து விழுந்­த­தில் 12 பேர் உயரிழந்துள்ளனர்.

இது­கு­றித்து சிறப்பு நிவா­ரண ஆணை­யர் பிர­தீப் குமார் கூறுகை யில், "ஒடி­சா­வில் பார்­கர், நுவா­பாடா, ஜஜ்­பூர், பலேஸ்­வர், பத்­ராக் ஆகிய இடங்­களில் வீடு­கள் இடிந்து விழுந்­த­தில் மொத்­தம் ஐவர் பலி­யா­கி­யுள்­ள­னர். இதற்கு முன்னதாக மயூர்­பஞ்ச், கியோஞ்­சர், சுந்­தர்­கர் ஆகிய இடங்­களில் எழுவர் பலி­யா­கி­னர். கன­மழை கார­ண­மாக 10 மாவட்­டங்­களில் 415,817 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்," என்றார்.