காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதல்

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதல்

2 mins read
0f141b00-7f9d-47a8-99be-009b03f9a366
2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க குலாம் நபி ஆசாத் (படம்) கட்டாயப்படுத்தியதாகவும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசை அழித்தவர் என்றும் அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்ரி கடுமையாகக் குறைகூறி உள்ளார். கோப்புப்படம் -

உட்கட்சி தேர்தல் யோசனை தெரிவித்த குலாம் நபி ஆசாத்துக்கு கடும் எதிர்ப்பு

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யில் உட்­கட்­சித் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்­றும் அவ்­வாறு செய்யாவிட்­டால் ஐம்­பது ஆண்­டு­கள் ஆனா­லும் காங்­கி­ரஸ் ஆட்­சிக்கு வர­மு­டி­யாது என்றும் கூறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க குலாம் நபி ஆசாத் (படம்) கட்டாயப்படுத்தியதாகவும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரசை அழித்தவர் என்றும் அந்த மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நிர்மல் காத்ரி கடுமையாகக் குறைகூறி உள்ளார்.

காங்­கி­ரஸ் கட்­சிக்­குப் புதிய தலைமை எப்­படி அமைய வேண்­டும் என்­பது குறித்து இடைக்­கால தலை­வர் சோனியா காந்­திக்கு குலாம் நபி ஆசாத் உள்­ளிட்ட 23 மூத்த தலை­வர்­கள் கடி­தம் எழுதி இருந்­த­னர்.

"காங்­கி­ர­சுக்கு முழு­நேர, துடிப்­பான தலைமை தேவை. கட்­சி­யின் தலை­மை­யில் இருந்து அடி­மட்­டம் வரை மாற்­றம் தேவை. உட்­கட்சி தேர்­தல் மூலம் நிரந்­த­ரத் தலை­வரை தேர்வு செய்ய வேண்­டும்," என அவர்­கள் அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­த­னர்.

இதன் பின்­னர் கடந்த 24ஆம் தேதி நடை­பெற்ற காங்­கி­ரஸ் செயற்குழு கூட்­டத்­தில் தலை­வர்­க­ளின் கடி­தம் குறித்து விவா­திக்­கப்­பட்­டது. அப்­போது கடி­தம் எழு­திய தலை­வர்­களை ராகுல் காந்தி மிகக் கடு­மை­யாக விமர்­சித்­த­தா­கக் கூறப் ­ப­டு­கிறது.

காரிய கமிட்டி கூட்­டத்­தின் முடி­வில் இடைக்­கால தலை­வ­ராக சோனியா காந்­தியே நீடிப்­பார் என்று முடிவு செய்­யப்­பட்­ட­தால் கடி­தம் எழு­திய மூத்த தலை­வர்­கள் கடும் அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர்.

இது­தொ­டர்­பாக காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் குலாம் நபி ஆசாத் கூறு­கை­யில், "ஜன­நா­யக முறை­யில் உட்­கட்­சித் தேர்­தலை நடத்தி காங்­கி­ர­சுக்கு நிரந்­தரத் தலை­வரை தேர்ந்­தெ­டுக்க வேண்­டும். தேர்­தல் மூலம் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும்­போது 51 விழுக்­காட்­டி­ன­ரா­வது உங்­கள் பின்­னால் இருப்­பார்­கள்.

"தற்போது காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாநி­லத் தலை­வர்­கள் பரிந்­து­ரை­யின் பேரில் நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இது கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தும் நட­வ­டிக்கை. உட்­கட்சித் தேர்­தல் நடத்­தி­னால் மட்­டுமே காங்­கி­ரசை வலுப்­ப­டுத்த முடி­யும். இல்­லை­யென்­றால் அடுத்த ஐம்­ப­து­ஆண்­டு­க­ளுக்கு காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சிக்கு வர முடி­யாது. எதிர்க்­கட்சி வரி­சை­யில்­தான் அமர வேண்­டும்," என்று அவர் தெரி­வித்­துள்­ளார். முன்­னாள் மத்­திய அமைச்­சர் கபில் சிபல் கூறும்­போது, கடி­தம் எழு­திய மூத்த தலை­வர்­கள் மீது செயற்குழுக் கூட்­டத்­தில் கூறப்­பட்ட விமர்­ச­னங்­கள் அநா­க­ரி­க­மாக உள்­ளன என்­றார்.