பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், “இந்தியாவின் நாட்டு வகை இனங்களான தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம், சிப்பிப்பாறை வகை நாய்களை வீடுகள்தோறும் வளர்க்க வேண்டும். வீட்டு காவலுக்கு இவை சிறந்த பாதுகாப்பு அளிப் பவை,’’ என புகழ்ந்து கூறியுள்ளார்.
பிரதமரின் இந்தக் கருத்தால் ராஜபாளையம் நாய் வளர்ப்புப் பண்ணையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் நாய் வளர்ப்பு பண்ணையாளர் திவ்யா கூறுகையில், “செல்லப்பிராணிகள் வளர்ப்போரின் முதல் தேர்வாக ராஜபாளையம் நாய் இனங்கள் முதலிடம் வகிக்கின்றன. கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி இன நாய்கள் தோட்ட பாது காப்புக்கும் ராஜபாளையம் இன நாய்கள் வீட்டுக் காவலுக்கும் சிறந்தது. ராஜபாளையம் வகை நாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது,” என்றார்.
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பற்றியும் பிரதமர் பேசினார். “பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. விளை யாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்கவேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் எங்கும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்,” என்றார்.