மதுரை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நேற்றுகாலை முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கோவில்கள் திறக்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆலயங்களில் வழிபாடு செய்ய அதிகாலை 4 மணி முதலே மக்கள் வரிசைப் பிடித்து நின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தென்காசி காசி விஸ்வ நாதர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட பெரிய கோயில்களில் தரிசனம் செய்ய ஏராளமான மக்கள் அலைமோதினர்.
இதனால், ஒருபுறம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொரு புறம் திரளான கூட்டத்தைக் கண்டு போலிசார் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஒருசில இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலிசார் திணறினர்.
குறிப்பாக, நேற்று முதல் நாளி லேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மக்கள் கூட்டம் அலை மோதியதாக தகவல்கள் கூறின.
பழனி முருகன் கோவிலுக்கும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தரிசனத்திற்கு முன்பதிவு செய்து வரவேண்டும் என கூறி யிருந்த நிலையில், முன்பதிவு குறைவாக இருந்ததால் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதேபோல மதுரை மீனாட்சி யம்மன் கோவிலிலும் நேற்று அதி காலை 4 மணி முதலே கூட்டம் குவியத் தொடங்கியதால் பாது காப்புப் பணிகளில் ஈடுபட்ட போலி சார் மக்களை சமூக இடைவெளியுடன் நிற்கச் செய்து கோவிலுக்குள் அனுமதித்தனர்.
மேலும் பாதுகாப்புக் காரணங் களுக்காக லட்டு பிரசாதம் அளிக்கவில்லை என்பதுடன் 10 வயதிற்கு குறைவானோர், 60 வயதிற்கு மேலானோர், கர்ப்பிணிப் பெண்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 2,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
6 அடி தனி மனித இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோல பல கோவில்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள், துண்டை முகத்தில் சுற்றிக் கொண்டு வந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
கிறிஸ்துவ தேவாலயம், பள்ளி வாசல்கள், தர்காக்கள், சீக்கிய குருத்வாரா, புத்தவிகார், ஜெயின் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.