மூவாயிரம் மீட்டர் உயரத்தில் குகைப் பாதை

மூவாயிரம் மீட்டர் உயரத்தில் குகைப் பாதை

1 mins read
853f0bee-75f0-4c5a-b3aa-8fb5987c69df
அடல் குகை பாதையில் அதிகாரிகள். படம்: ஊடகம் -

கடல் மட்­டத்­தி­லி­ருந்து சுமார் 3 ஆயி­ரம் மீட்­டர் உய­ரத்­தில் கட்­டப்­பட்­டுள்ள குகைப்­பாதை விரை­வில் திறந்து வைக்­கப்­பட உள்­ள­தாக இமாச்­ச­லப் பிர­தேச அரசு அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இமாச்­ச­லப் பிர­தே­சத்­தை­யும் லடாக் எல்­லைப் பகு­தி­யை­யும் இணைக்­கும் இந்­தப் புதிய பாதைக்கு அடல் குகை பாதை எனப் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு குகை தோண்டும் பணி தொடங்கியது. ஐந்தாண்டுகளில் இப்பணியை முடிக்கத் திட்டமிட்டபோதும் அது சாத்தியமாகவில்லை.

கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் மலைகளைக் குடைந்து குகைப்பாதை அமைக்கும் பணியில் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றினர். நாள்தோறும் சுமார் மூவாயிரம் வாகனங்கள் இப்பாதையைக் கடந்து செல்லும் அளவுக்கு பலமாக கட்டப்பட்டுள்ளது. 1,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு இதுவரை 3,200 கோடி செலவாகி உள்ளது.