புதிய உச்சம்: இந்தியாவில் ஒரே நாளில் 83,883 பேருக்குத் தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத விதமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,883 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 3,853,406ஆக அதிகரித்தது.

கொரோனா தொற்றால் மேலும் 1,043 பேர் மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 67,376ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில், தொற்றிலிருந்து மீண்டோர் விகிதமும் 77.06 விழுக்காடாக ஏற்றம் கண்டது. அதுபோல, உயிரிழப்பு விகிதமும் 1.75 விழுக்காடாகக் குறைந்தது.

இதனிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. ஆக அதிகமாக, நேற்று 1.17 மில்லியன் பரிசோதனைகள் இடம்பெற்றன. அதாவது, ஒரு மில்லியன் பேருக்கு 28,000 என்ற விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள பிரேசில் நான்கு மில்லியன் பாதிப்புகளை நெருங்கிவிட்டது. அதைவிட, ஏறத்தாழ 150,000 பின்தங்கியுள்ள இந்தியா இன்னும் சில நாட்களில் பிரேசிலை முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.11 மில்லியன் தொற்றுச் சம்பவங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!