கொரோனா சூழல் காரணமாக உலக நாடுகள் பலவற்றைப் போல இந்தியாவிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இருப்பினும் இணையம், தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கைபேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற வசதிகள் இல்லாத மாணவர்கள் படிக்க வழியின்றி தவிக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூரில் உள்ள ஆஷா மராத்தி வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியை தஸ்லிம்பானோ ஹருன் பதான் ஒரு வீட்டின் சுவரில் எழுதி மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.
சுமார் அரை டஜன் பிள்ளைகள் நின்றபடியே படித்ததைக் காண முடிந்தது. அந்தப் பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் ஏழை மாணவர்களுக்கு இவ்வாறு பாடம் நடத்துவதைக் காண முடிந்தது.