நான்கு மில்லியன் கிருமித்தொற்றுகளைத் தாண்டி உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. அந்நாட்டில் கிருமித்தொற்று நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தப் பிரச்சினை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மோசமாக இருப்பதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இன்று பதிவான 86,432 புதிய சம்பவங்களுடன் சேர்த்து மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4, 023, 179 ஆக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை தற்போது அமெரிக்காவில் குறைந்தது 6.3 மில்லியனாகவும் பிரேசிலில் 4.1 மில்லியனாகவும் உள்ளது.
மந்தமாகிவரும் பொருளியலுக்குப் புத்துயிரூட்டும் முயற்சியாக இந்தியா, நடமாட்டக் கட்டுப்பாடுகள் பலவற்றைத் தளர்த்தியுள்ளபோதும் அங்குதான் இந்நோய் ஆக வேகமாகப் பரவுகிறது. நாளுக்கு 80,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுகளும் 1,000க்கு அதிகமான மரண எண்ணிக்கையும் பதிவாகி வருகிறது. தினசரி கிருமித்தொற்றுகளில் கால் பங்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் கிருமிப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை இந்தியாவில் நிலைமை சீரடையாது என்று இந்தியாவில் நோய்ப்பரவலை ஆராயும் ஆய்வாளர் டாக்டர் ஷாமிகா ரவி தெரிவித்தார்.