சென்னை: மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது திருமண நாளைக் கொண்டாடி உள்ளார்.
இத்தகவல் அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டார் எஸ்.பி.பாலா. அப்போது முதல் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடையில் சில நாட்கள் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ரசிகர்கள் அவருக்காக தீவிரப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தமது 51ஆவது திருமண நாளை அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபடியே மனைவி சாவித்திரியுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.இத்தகவலை அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.