மேற்குவங்கம்: புதிய கல்விக் கொள்கைக்கு அவசரமில்லை

மேற்குவங்கம்: புதிய கல்விக் கொள்கைக்கு அவசரமில்லை

1 mins read
959ce409-7db0-4b47-802b-35b2d3a3237f
படம்: இந்திய ஊடகம் -

புதிய தேசி­யக் கல்­விக் கொள்­கையை மேற்கு வங்க மாநி­லத்­தில் அமல்­ப­டுத்த தற்­போது வாய்ப்­பில்லை என அம்­மா­நில கல்வி அமைச்­சர் பார்த்தா சாட்­டர்ஜி தெரி­வித்­துள்­ளார்.

புதிய கல்­விக் கொள்கை குறித்து அனைத்­துத் தரப்­பி­ன­ரு­ட­னும் விரி­வாக விவா­தம் நடத்­தப்­பட வேண்­டும் என அவர் வலி­யு­றுத்­தி­ உள்ளார்.

"நாட்­டின் கூட்­டாட்சி தத்­து­வத்­தை­யும் மாநி­லங்­க­ளின் பங்­கை­யும் குறைத்து மதிப்­பிட்­டு­வி­டக்­கூ­டாது. தேசி­யக் கல்­விக் கொள்­கை­யின் சில அம்­சங்­களை ஆராய வேண்டி உள்­ளது," என்­றார் அமைச்­சர் பார்த்தா.

தற்­போ­தைய சூழ­லில் தொற்று நோயை எதிர்த்­துப் போரா­டு­வ­தில்­தான் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்று குறிப்­பிட்ட அவர், புதிய கல்­விக் கொள்­கை­யைச் செயல்­ப­டுத்­து­வ­தில் அவ­ச­ரம் தேவை­யில்லை என்­றார்.

புதிய தேசிய கல்­விக் கொள்­கைக்கு ஆத­ரவு, எதிர்ப்பு என இரண்­டும் கிளம்­பி­யுள்­ளன.

குறிப்புச் சொற்கள்