புதிய தேசியக் கல்விக் கொள்கையை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த தற்போது வாய்ப்பில்லை என அம்மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பினருடனும் விரிவாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
“நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும் மாநிலங்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. தேசியக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களை ஆராய வேண்டி உள்ளது,” என்றார் அமைச்சர் பார்த்தா.
தற்போதைய சூழலில் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில்தான் கவனம் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதில் அவசரம் தேவையில்லை என்றார்.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் கிளம்பியுள்ளன.