சினிமா ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி

சினிமா ஆசை காட்டி ரூ.1 கோடி மோசடி

1 mins read
d621c8a8-2e36-4f08-9596-d9cf646bc867
மாதிரிப்படம்: ஊடகம் -

திரைத்­து­றை­யில் முத­லீடு செய்­தால் அதிக லாபம் பார்க்­க­லாம் என்று ஆசை­வார்த்தை கூறித் தம்­மி­டம் ஒரு கோடி ரூபாய் பெற்று மோசடி செய்­த­தாக நான்கு பேர் மீது தக­வல் தொழில்­நுட்ப நிபு­ணர் ஒரு­வர் போலி­சில் புகார் அளித்­துள்­ளார்

பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த நாரா­யண் என்ற அந்த ஆட­வர் தனி­யர் நிறு­வ­னத்­தில் பணி­யாறுகிறார்.

இந்­நி­லை­யில் கடந்­தாண்டு மாருதி, புட்­ட­சாமி, ராஜேஷ், கேசவ் ஆகிய நான்கு பேரு­டன் அவ­ருக்கு அறி­மு­க­மா­னது. அப்­போது இவ­ரி­டம் ஒன்­றரை கோடி ரூபாய் இருப்­பது மாரு­திக்­கும் கேச­வுக்­கும் தெரி­ய­வந்­தது.

சினி­மா­வில் முத­லீடு செய்­தால் குறு­கிய காலத்­தில் அதிக லாபம் சம்­ப­திக்­க­லாம் என நாரா­யண் மன­தில் ஆசையை விதைத்­துள்­ளார் மாருதி. மற்ற மூவ­ரும் இதை அமோ­திக்க, சம்­பா­திக்­கும் ஆசை­யால் தூண்­டப்­பட்ட நாரா­யண் அவர்­களை நம்பி ஒரு கோடி ரூபாய் கொடுத்­துள்­ளார்.

தங்­க­ளுக்­குத் தெரிந்த தயா­ரிப்­பா­ளர்­கள் மூலம் அத்­தொ­கையை முத­லீடு செய்­வ­தா­கக் கூறிய மாருதி உள்­ளிட்ட நால்­வ­ரும் அவ்­வாறு செய்­ய­வில்லை.

ஒரு கட்­டத்­தில் பொறுமை இழந்த நாரா­யண், தாம் கொடுத்த பணத்­தைத் திருப்­பித் தரு­மாறு கேட்­டுள்­ளார். ஆனால், நால்­வ­ரும் பணம் தர மறுத்­த­தோடு அவ­ருக்­குக் கொலை மிரட்­ட­லும் விடுத்­த­தா­காக் கூறப்­ப­டு­கிறது. நால்வரும் தேடப்படுகிறார்கள்.