விமானத்துக்குள் பயணிகள், புகைப்படம் எடுக்கவும் வீடியோ எடுக்கவும் தடையில்லை என்று இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விமானத்துக்குள் பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்கலாம் என, இது தொடர்பாக 2004 டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்று அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. அதே நேரம் விமானப் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்கும் பதிவு செய்யும் கருவிகள் விமானத்துக்குள் பயன்படுத்த அனுமதியில்லை.
பதிவு செய்யும் கருவிகளால் விமான இயக்கத்துக்கு தடை ஏற்படுவதாகவும் இயக்குனரகம் குறிப்பிட்டது.
அண்மையில் சண்டிகாரிலிருந்து மும்பைக்கு விமானத்தில் சென்ற இந்தி நடிகை கங்கனா ரணாவத்திடம் செய்தியாளர்கள் கூட்டமாக நின்று பேட்டியெடுத்தனர்.
இது தொடர்பான காணொளிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின.
அந்த சமயத்தில் செய்தியாளர்கள் பலதரப்பட்ட பதிவு செய்யும் கருவிகளைப் பயன்படுத்தினர்.
இதையடுத்து விமானப் பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டு உள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு இயக்குனரகம் அறிவுறுத்தியது.
மேலும் விமானத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்ட இயக்குனரகம், மீறினால் அந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானம் 2 வாரங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று எச்சரித் தது.
தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள இயக்குனரகம், விமானத்தில் பயணிகள் புகைப் படம், வீடியோ எடுக்கலாம் என்று தெரிவித்தது.