மரணத்தின் பிடியில் இருந்த ஆடவரை மீட்ட மருத்துவர்கள்: கேரள முதல்வர் பெருமிதம்

2 mins read
f13f6bd0-800e-4bda-9ca3-5f890b8297ac
மகாராஷ்டிராவில் 21 ஆயிரம் போலிசாருக்கு கிருமி தொற்றியுள்ளது. எனவே போலிசாருக்கும் பரிசோதனை நடக்கிறது. படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: இந்­தி­யா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 5.40 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது. இது­வரை குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 4.30 மில்­லி­ய­னாக உயர்ந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் கேர­ளா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.

அம்­மா­நி­லத்­தில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 4,644 பேருக்கு கிருமி தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 131,025 ஆக அதி­க­ரித்­துள்­ளது. சுமார் 37 ஆயி­ரம் பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரும் நிலை­யில், இது­வரை சுமார் 93 ஆயி­ரம் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். பலி எண்­ணிக்கை 519 ஆக உள்­ளது.

இதற்­கி­டையே கொரோனா கிரு­மித்­தொற்­றால் மர­ணத்­தின் விளிம்­புக்­குச் சென்ற ஒரு நோயா­ளி­யைக் கடும் போராட்­டத்­துக்­குப் பின்­னர் மருத்­து­வர்­கள் காப்­பாற்­றி­ய­தாக கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

கொல்­லம் மாவட்­டத்­தைச் சேர்ந்த 54 வய­தான அந்த ஆட­வர் 72 நாட்­க­ளுக்கு முன்பு கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டார். இதை­ய­டுத்து கொல்­லம் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட அவ­ருக்கு 43 நாட்­கள் செயற்கை சுவா­சம் அளிக்­கப்­பட்­டது. அப்­போது 20 நாட்­கள் கோமா நிலை­யில் இருந்­துள்­ளார்.

"ஜூலை 6ஆம் தேதி கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட பிறகு அந்த ஆட­வ­ருக்கு 30 முறை ரத்த சுத்­தி­க­ரிப்பு (டயா­லி­சிஸ்) செய்­யப்­பட்­டது. இரண்டு முறை பிளாஸ்மா தெரப்பி சிகிச்­சை­யும் அளிக்­கப்­பட்­டது. இதற்­காக 6 லட்­சம் ரூபாய் செல­வாகி உள்­ளது.

"பிசி­யோ­தெ­ரப்பி மூலம் அவ­ரது பேச்­சுத்­தி­றன் மீட்­கப்­பட்­டது. மருத்­து­வர்­கள் 72 நாட்­கள் போராடி அவரை மர­ணத்­தின் விளிம்­பி­லி­ருந்து மீட்­டுள்­ள­னர்," என்று முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­தார்.

தாக்­கி­னால் 5 ஆண்டு சிறை

இதற்­கி­டையே கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரா­கப் போராடி வரும் மருத்­து­வர்­கள் மற்­றும் சுகா­தார ஊழி­யர்­க­ளைத் தாக்­குபவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்க வகை செய்­யும் புதிய சட்­டம் மாநி­லங்­க­ள­வை­யில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இத்­த­கைய குற்­றத்­தில் ஈடு­ப­டு­வோ­ருக்­குக் 2 லட்­சம் ரூபாய் வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

தடுப்­பூசி மூன்­றாம் கட்ட

பரி­சோ­தனை

இந்­நி­லை­யில் ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­க­மும் அஸ்ட்ரா ஜெனேக்கா நிறு­வ­ன­மும் இணைந்து உரு­வாக்கி உள்ள 'கொவி­ஷீல்ட்' கொரோனா தடுப்­பூ­சி­யின் மூன்­றாம் கட்­டப் பரி­சோ­தனை இன்று முதல் தொடங்க இருப்­ப­தாக புனே­யில் உள்ள சீரம் இன்ஸ்­டி­டி­யூட் தெரி­வித்­துள்­ளது.