சென்னை: பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவாக குணமடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களாக தமது தந்தை திட உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது தமது தந்தையால் மருத்துவர்களின் உதவியோடு எழுந்து அமர முடிகிறது என்றும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் எஸ்.பி.பி. சரண் கூறியுள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்குத் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் எஸ்.பி.பாலாவின் தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.