கர்ப்பத்தில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிய மனைவியின் வயிற்றை அரிவாளால் கிழித்த ஆடவர்; மனைவி கவலைக்கிடம்

உத்தரப் பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அரிவாள் கொண்டு கிழித்த ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மனைவியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், கருப்பையில் இருந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அந்தக் குழந்தை இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்டது.

ஏற்கெனவே 5 பெண் குழந்தைகளைக் கொண்டுள்ள தம்பதிக்கு இது ஆறாவது கர்ப்பம்.

ஆறாவதும் பெண் குழந்தையாகிப் போகுமோ என்ற அச்சத்தில் அந்த ஆடவர், இவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

வரதட்சணைக் கொடுமையால், பெண் குழந்தைகளைப் பாரமாக இந்தியர்கள் பலர் கருதுகின்றனர். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறுவது சட்ட விரோதம்.

ஆனால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள ஆடவர் இவ்வளவு மோசமாக நடந்துகொண்ட அந்த ஆடவர் தற்போது போலிஸ் காவலில் இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!