புதுடெல்லி: இந்தியாவில் கதை சொல்லுவது என்பது மிக அருமையான ஒரு கலை என்றும் தமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் பாரம்பரியம் வெகு சிறப்பானது என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். அத்தகைய கலைகளை அடுத்த தலைமுறைகளிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திரு மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதில் இருந்து பொதுமக்களுடன் அகில இந்திய வானொலி மூலமாக ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
இதனையொட்டி நேற்று திரு மோடி பேசினார்.
“கதைகளின் வரலாறு மனித நாகரிகத்தைப் போலவே பழமை யானது. ஓர் ஆன்மா இருக்கும் இடத்தில் ஒரு கதை இருக்கிறது.
“நமது கிராமங்களின் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நம் நாட்டில் பலவகையான நாட்டுப்புறக் கலைகள் இருக்கின்றன.
“தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கதைகள் சொல்லும் மிக சுவாரசியமான பாணி இருக்கிறது.
“பஞ்சதந்திர கதைகள் போன்றவை இந்தியாவின் சிறப்பான பாரம்பரியத்தை உணர்த்துகின்றன.
“சுதந்திரப் போராட்டத்தில் இந்தியா சந்தித்த பிரச்சினைகளைக் கதைகள் மூலம் எடுத்துரைக்க வேண்டும்.
“சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நாம் கொண்டாடப் போவ தால் வெளிநாட்டு ஆட்சியின் காலத்திலிருந்து இடம் பெற்ற வரலாறுகளைக் கதைகளாகச் சொல்லித்தரும்படி கதை சொல்லும் கலைஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பிரதமர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.