ராகுல்: வேளாண் சட்டங்கள் மரண தண்டனைக்கு சமம்

1 mins read
860f8f97-5dc8-4048-8591-cb04a3a0bd86
படம்: இந்திய ஊடகம் -

மத்­திய அரசு நிறை­வேற்றி உள்ள வேளாண் சட்­டங்­க­ளுக்கு காங்­கி­ரஸ் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ளது.

இந்­தச் சட்­டங்­கள் விவ­சா­யி­க­ளுக்கு மர­ண­ தண்­டனை போன்­றது என ராகுல் காந்தி தமது டுவிட்­டர் பதி­வில் விமர்­சித்­துள்­ளார்.

நாட்­டி­லுள்ள விவ­சா­யி­க­ளின் குரல் நாடா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் நசுக்­கப்­பட்­டுள்­ளது என்று அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தி­யா­வில் ஜன­நா­ய­கம் செத்­து­விட்­டது என்று குறிப்­பிட்டு, மாநி­லங்­க­ள­வை­யில் வேளாண் சட்­டங்­களை நிறை­வேற்­றி­ய­போது வாக்­கெ­டுப்பு நடத்­த­வேண்­டும் என்று எதிர்க்­கட்­சி­கள் விடுத்த கோரிக்­கை­கள் குறித்து நாளே­டு­களில் வெளி­யான செய்­தியை அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் மத்­திய அர­சின் வேளாண் சட்­டங்­களை நிரா­க­ரிக்­கும் வகை­யில் மாநில சட்­டப்­பே­ர­வை­கள் தீர்­மா­னம் நிறை­வேற்ற வேண்­டும் என காங்­கி­ரஸ் ஆளும் மாநில முதல்­வர்­களை சோனியா காந்தி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மத்­திய அர­சின் வேளாண் சட்­டங்­களை நிரா­க­ரிக்­கும் உரிமை மாநி­லங்­க­ளுக்கு உண்டு என காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் கே.சி. வேணு­கோ­பால் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து அவை விரைவில் அறிவிக்க உள்ளன. காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடக்கும் எனத் தெரிகிறது.