வங்கிக் கணக்கு முடக்கம்: 'அம்னெஸ்டி' கடும் அதிருப்தி

1 mins read
6653346c-6d0c-448b-bbe3-dd06d732493d
படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: அனைத்­துலக மனித உரிமை அமைப்­பான 'அம்­னெஸ்டி' இந்­தி­யா­வில் தனது செயல்­பா­டு­களை நிறுத்தி உள்­ளது.

அந்த அமைப்­பின் வங்­கிக்­கணக்கு­களை மத்­திய அரசு முடக்­கி­யதே இதற்­குக் கார­ணம் என அதன் இந்­திய நிர்­வாக இயக்­கு­நர் அவி­னாஷ் குமார் தெரி­வித்­தார்.

"கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக 'அம்­னெஸ்டி' மீதான தொடர்ச்­சி­யான அடக்­கு­முறை, அமைப்­பின் வங்­கிக் கணக்­கு­கள் இந்­திய அர­சால் முடக்­கப்­ப­டு­வது ஆகி­யவை தற்­செ­ய­லா­னது அல்ல.

"அம­லாக்­கத்­துறை உள்­ளிட்ட மத்­திய அரசு முக­மை­கள் தொடர்ந்து எங்­க­ளுக்­குத் தொல்லை கொடுத்­த­வண்­ணம் இருந்­தன. கார­ணம் அரசு செயல்­பா­டு­களில் வெளிப்­ப­டைத்­தன்­மையை வலி­யு­றுத்­தி­ய­து­தான்," என்று அவி­னாஷ் குமார் கூறி­யுள்­ளார்.

அண்­மைய டெல்லி கல­வ­ரம், ஜம்மு-காஷ்­மீ­ரில் கடு­மை­யான மனித உரிமை மீறல்­கள் தொடர்­பாக காவல்­துறை மற்­றும் இந்­திய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக எதிர்ப்­புக் குரல்­க­ளைப் பதிவு செய்ய முடி­யாத அளவு அநீதி நில­வு­கிறது என்றும், இவற்றுக்கு எதி­ரா­கக் குரல் எழுப்­பு­வ­தைத் தவிர தங்­கள் அமைப்பு வேறு ஒன்­றும் செய்­து­வி­ட­வில்லை என்றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.