கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன், சியாமளா தம்பதியின் மகளான பூர்விகா (3 வயது) கடந்த சில தினங்களாக சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்ததாகத் தெரிகிறது.
இதனால் கவலையடைந்த பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். கோவில் பூசாரியான ராகேஷ் (19 வயது) குழந்தைக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி சிறப்புப் பூசை நடத்தவேண்டும் என்று கூறி உள்ளார்.
பெற்றோர் சம்மதிக்கவே, குழந்தை பூர்விகாவை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார் பூசாரி. இதில் காயமடைந்த பூர்விகா உயிரிழந்ததை அடுத்து ராகேஷ் கைதாகியுள்ளார்.