தங்கக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட கேரள அரசியல்வாதி

தங்கக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட கேரள அரசியல்வாதி

2 mins read
2dc18919-f8f2-418c-a9da-f4273ffc2ad3
படங்கள்: ஊடகம் -

இந்­தி­யா­வின் கேரள மாநிலத் தலை­ந­கர் திரு­வனந்­த­பு­ரத்­திற்கு துபா­யில் இருந்து வந்த விமா­னம் வழி­யாக தங்­கம் கடத்த முயன்ற சம்­ப­வம் தொடர்­பில் கோழிக்­கோடு மாவட்­டம், கொடு­வல்லி நக­ராட்சி மன்ற உறுப்­பி­ன­ரான கேரட் ஃபைசாலை (படம்) சுங்­கத் துறை­யி­னர் காவ­லில் வைத்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

தங்­கக் கடத்­தல் சம்­ப­வத்­திற்கு ஃபைசாலே மூளை­யா­கச் செயல்­பட்­டார் என்று சுங்­கத்­துறை கூறி­ய­தாக 'மனோ­ரமா நியூஸ்' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் நேற்று அதி­கா­லை­யில் ஃபைசாலின் வீட்­டில் நடத்­திய அதி­ரடி சோத­னை­யில் ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது. அத்­து­டன், ஃபைசாலின் கைபேசி­யில் உள்ள தக­வல்­களும் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

தூத­ர­கம் வழி­யாக ஃபைசால் இது­வரை கிட்டத்தட்ட 400 கிலோ தங்­கம் கடத்தியிருப்­ப­தைச் சுங்­கத்­துறை கண்­டு­பி­டித்­துள்­ளது. அந்த எல்­லாச் சம்­ப­வங்­க­ளி­லும் ஃபைசால் பணம் முத­லீடு செய்­ததும் தெரி­ய­வந்­துள்­ளது.

மேல்­வி­சா­ர­ணைக்­காக கொச்­சிக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட ஃபைசால் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

இவ்­வாண்டு ஜூலை 5ஆம் தேதி, திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலைய சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் ரூ.14.82 கோடி மதிப்­பு உடைய 30 கிலோ தங்­கத்­தைக் கைப்­பற்­றி­னர். தங்­கம் இருந்த தூத­ரக சரக்­குப் பை திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் துணைத் தூத­ர­கத்­திற்கு விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தது.

அதைத் தொடர்ந்து, பல்­வேறு அமைப்­பு­கள் நடத்­திய விசா­ர­ணை­களில் கேரள அர­சாங்க அலு­வ­ல­கங்­களில் பணி­யாற்­றும் சில­ருக்­கும் தங்­கக் கடத்­த­லில் தொடர்­பு ­இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. முக்­கிய குற்­ற­வா­ளி­க­ளான பி எஸ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்­தீப் நாயர் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், ஸ்வப்னா சுரே­ஷுக்­கும் மாநில முதல்­வர் பின­ராஜி விஜ­ய­னின் முதன்­மைச் செய­லா­ளர் எம் சிவ­சங்­க­ர­னுக்­கும் தொடர்­பி­ருந்­தது உறு­தி­செய்­யப்­பட்­டது. அதை­ அடுத்து, சிவ­சங்­க­ரன் பணி­யி­டை­நீக்­கம் செய்­யப்­பட்டு, முதன்­மைச் செய­லா­ளர் பொறுப்­பில் இருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

இத­னி­டையே, நான்­கா­வது குற்­ற­வா­ளி­யா­கச் சேர்க்­கப்­பட்டு உள்ள சந்­தீப் நாயர், அர­சாங்­கத் தரப்­புச் சாட்­சி­யாக மாற விரும்­பு­வதாக தேசிய புல­னாய்­வுப் பிரிவு நீதி­மன்­றத்­தில் மனு அளித்து இருக்கிறார்.