தலைநிமிரும் உற்பத்தித்துறை

2 mins read
2112654d-e064-4ab6-8ffd-b888ba8f8d67
படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வின் உற்­பத்­தித் துறை எட்டு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு இந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் வேக­மாக வளர்ச்சி கண்டு இருக்­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக பிறப்­பிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் படிப்­படி­யாக அகற்­றப்­பட்­டதை அடுத்து தேவை அதி­க­மா­ன­தா­க­வும் அதை ஈடு­செய்ய உற்­பத்தி பெரு­கி­ய­தா­க­வும் தனி­யார் துறை நடத்­திய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

இருந்­தா­லும் ஆட்­கு­றைப்­பு­கள் தொடர்ந்து அதிகரித்து வந்­த­தாக அந்த ஆய்வு கூறு­கிறது. இந்­தி­யப் பொரு­ளி­யல் கொவிட்-19 கார­ண­மாக 1979க்குப் பிறகு முதன்­மு­றை­யாக இந்த ஆண்டு படு­மோ­ச­மாக முழு ஆண்­டி­லும் வீழ்ச்சி அடை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில், பொரு­ளி­யல் மீள்­வ­தற்­கான அறி­கு­றி­கள் உற்­பத்­தித் துறை மூலம் தெரி­ய­வந்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்க ஒன்று என்று அந்த ஆய்வு தெரி­விக்­கிறது. செப்­டம்­ப­ரில் உற்­பத்­தித் துறை 56.8 விழுக்­காடு கூடி­ய­தா­க­வும் 2012 ஜன­வ­ரிக்குப் பிறகு இதுவே ஆக அதிக அளவு என்­றும் 'ஐஎச்எஸ் மார்க்­கிட்' என்ற அமைப்பு தொகுத்த அட்­ட­வணை குறிப்­பி­டு­கிறது.

"இந்­திய உற்­பத்­தித் துறை சரி­யான திசை­யில் தொடர்ந்து மேம்­பட்டு வரு­கிறது. செப்­டம்­பர் மாதம் பல ஆக்­க­க­ர­மான அறி­கு­றி­கள் தெரி­ய­வ­ரு­கின்­றன," என்று ஐஎச்எஸ் மார்க்­கிட் அமைப்­பின் பொரு­ளி­யல் இணை இயக்­கு­நர் டி லிமா தெரி­வித்­தார்.

கொவிட்-19 தொற்று நில­வ­ரம் எப்­படி ஆகுமோ என்­பது தெரி­ய­வில்லை என்­றா­லும் இப்­போ­தைக்கு உற்­பத்­தி­யா­ளர்­கள் கொஞ்­சம் பெரு­மூச்­சு­விட முடி­யும் என்­றார் அவர்.உற்­பத்­தித் துறை சுறு­சு­றுப்பு அடைந்த போதி­லும் நிறு­வ­னங்­கள் தொடர்ந்து ஆறா­வது மாத­மாக செப்­டம்­ப­ரில் பல ஊழி­யர்­களை வீட்­டுக்கு அனுப்­பின.

இந்­தி­யா­வில் கொவிட்-19 கார­ண­மாக மில்­லி­யன் கணக்­கான மக்­கள் வேலை­யி­ழந்து தவிக்­கி­றார்­கள். பண­வீக்­கம் தொடர்ந்து அதி­க­மாக இருந்து வரு­வ­தால் இந்­தியா­வின் மத்­திய வங்­கி­யான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்­தியா வரும் மாதங்­களில் உற்பத்தித் துறைக்கு அவ்­வ­ள­வாக ஆத­ரவு அளிக்­காது என்று கூறப்­ப­டு­கிறது.

எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பரில் 56.8% கூடியதாக ஆய்வு தகவல்