இந்தி திரைப்பட நடிகா் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதன் தொடர்பில் நடிகரின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.
முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்ட பிரபலங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் மூன்று நடிகர்கள் மீது குறிவைக்கப்பட்டு இருப்பதாகவும் வரும் நாட்களில் அவர்கள் விசாரிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தப் போதைப்பொருள் விவகாரத்தில் ரியா சக்கரபோர்த்தியே காரணகர்த்தா என்று கூறப்படுகிறது.
இதனிடையே, கர்நாடகத் திரைப்படத் துறை போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள பல நடிகர், நடிகைகளில் ஒருவரான சஞ்சனா கல்ராணி என்பவரின் 11 வங்கிக் கணக்குகள் அம்பலமாகி உள்ளதாகவும் அவை முடக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.