இந்தியாவில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 100,000

இந்தியாவில் கொவிட்-19 மரண எண்ணிக்கை 100,000

1 mins read
67d33396-212f-4dc3-bb86-61a1f997526f
படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொவிட்-19 கார­ண­மாக மர­ணம் அடைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏறக்­குறைய நேற்று 100,000 ஆகி­யது.

மொத்த மர­ணங்­களில் 33.7 விழுக்­காடு செப்­டம்­பர் மாதம் இடம் பெற்­ற­ன. செப்­டம்­ப­ரில் மட்­டும் 33,255 பேர் மாண்டுவிட்டனர்.

அதே­வே­ளை­யில், அந்த நாட்­டில் கொவிட்-19 வீரி­யம் குறைந்து வரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. மேலும் ஒரு சாதக நில­வ­ர­மாக, ஏறக்­கு­றைய 5.3 மில்­லி­யன் பேர் குண­ம­டைந்துள்ளனர்.

சிகிச்சை பெறு­வே­ாரின் அளவு 15.11 விழுக்­கா­டா­கக் குறைந்­து­விட்­டது. மொத்­தம் 6.3 மில்­லி­ய­னுக்­கும் அதிக மக்­கள் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்தது.

இத­னி­டையே, கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் மூன்­றில் இரண்டு பங்­கி­ன­ருக்கு அந்­தக் கிரு­மியை கொரோனா நோயா­ளி­கள்­தான் பரப்­பி­விட்­ட­னர் என்று ஆய்வு ஒன்று தெரி­வித்­தது.

ஆந்­தி­ரா­வி­லும், தமிழ்­நாட்­டி­லும் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றின் அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், இந்தி­யா­வில் கொவிட்-19 கிருமி இருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட நோயா­ளி­களில் சுமார் 8 விழுக்­காட்­டி­னர் உட்­பட்ட பல நோயா­ளி­களே அதிக தொற்று பர­வ­லுக்கு மிக முக்­கிய கார­ணம் என்று இந்த ஆய்வு தெரிவித்து உள்ளது.