கொரோனா தொற்றால் தந்தை உயிரிழப்பு; பெண் மருத்துவரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் தலைமறைவு

அரசு மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர், ஒரு தாதி உட்பட 4 சுகாதாரப் பணியாளர்களை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காவல் ஆய்வாளரின் 80 வயதான தந்தை கொவிட்-19 தொற்று காரணமாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் உயிரிழந்ததையடுத்து, காவல் ஆய்வாளரின் குடும்பத்தால் மருத்துவப் பணியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

சண்முக சுந்தரம் எனும் அந்த காவல் ஆய்வாளர் தற்போது தலைமறைவாகி இருக்கிறார். அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளாது.

சுமார் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்த 80 வயது முதியவருக்கு நீரிழிவுப் பிரச்சினை இருந்ததாகவும் கொவிட்-19ஆல் ஏற்பட்ட சிக்கல்களால் நேற்று மாலை அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவரது நிலைமை மோசமடைந்ததால் அவரது கால் விரல் அகற்றப்பட்டதாக மருத்துவர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 28,000ஐ கடந்திருப்பதாகவும் இதுவரை 525 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுமர் 5,000 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!