புதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் தாடி வளர்த்த பலரும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் தாடியை எடுத்துவிட்டனர்.
ஆனால் தாடி வளர்த்த பிரதமர் மோடியின் தாடி, இன்னமும் நீண்டு கொண்டே போகிறது.
இதற்குக் காரணம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பிரதமர் வீட்டில் மோடிக்கு முடி திருத்தம் செய்வதற்கு ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பிரதமரை நெருங்க அவர்களுக்கு அனுமதி இல்லை.
பிரதமர் யாரைச் சந்தித்தாலும் அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி தடுப்பு அமைக்க இப்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரலில், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கவுள்ளது.
தேசிய கீதத்தை எழுதிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர் போல் நீண்ட தாடியுடன் அங்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காகவே மோடி இப்படி தாடி வளர்ப்பதாகவும் கொரோனா காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.