புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று கடந்த ஒரு வார காலமாக குறைந்து வருகிறது.இதை வைத்துப் பார்க்கையில் கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதாகத் தெரிகிறது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இருந்தாலும் இன்னமும் முழு விழிப்பு நிலை தேவை என்று அது வலியுறுத்தியது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 74,442 பேருக்கு கிருமி தொற்றியதாகவும் 76,000 பேர் குண மடைந்ததாகவும் நேற்றுக் காலை 8 மணியளவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6.62 மில்லியன். 102,685 பேர் மாண்டுள்ளனர்.

