இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு அதிகம் ஆளாகும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்: ஐ.நா. கவலை

இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு அதிகம் ஆளாகும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள்: ஐ.நா. கவலை

1 mins read
4d0e74bb-0509-40f6-93a3-a35bb42b94b6
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பின்­தங்­கிய சமூ­கத்­தைச் சேர்ந்த பெண்­களும் சிறு­மி­க­ளும்­தான் பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றைக்கு அதி­கம் ஆளா­வ­தாக இந்­தி­யா­வுக்­கான ஐ.நா. அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். இது­தொ­டர்­பாக வெளி­யிட்­டுள்ள அண்­மைய அறிக்­கை­யில், பாலி­யல் குற்­றங்­களில் ஈடு­ப­டு ­பவர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்ற பிர­த­மர் மோடி­யின் அழைப்பை ஆத­ரிப்­ப­தாக அந்த அமைப்பு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­ முறை­க­ளுக்குத் தீர்வு காண அர­சுக்­கும் சமு­தா­யத்­துக்­கும் தொடர்ந்து ஆத­ரவு வழங்­கு­வ­தில் உறு­தி­யாக இருப்­ப­தாக ஐநா தெரி­வித்­துள்ளது.

"பின்­தங்­கிய சமூக குழுக்­க­ளைச் சார்ந்த பெண்­களும் சிறுமி­களும்­தான் அதி­கம் பாதிக்­கப்­படு­கி­றார்­கள் என்­ப­தற்கு ஹத்­ராஸ் மற்­றும் பல­ராம்­பூ­ரில் அண்­மை­யில் நடந்த பாலி­யல் பலாத்­கார மற்­றும் கொலை சம்­ப­வங்­கள் சாட்­சி­க­ளாக உள்­ளன," என்று ஐ.நா. சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

பாலின அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றை­யால் பாதிக்­கப்­ப­டு­வ­தில் பின்­தங்­கிய சமூ­கத்­தி­னர் அதிக ஆபத்­தில் உள்­ள­னர் என்­பதை அண்­மைய சம்­ப­வங்­கள் நினை­வூட்­டு­வ­தாக ஐ.நா. அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பெண்­கள் மற்­றும் சிறு­மி­க­ளுக்குப் பாது­காப்பு வழங்க இந்­திய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­களை வர­வேற்­ப­தா­க­வும் எனி­னும் அவை மேலும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் ஐ.நா. அறிக்கை மேலும் தெரி­விக்­கிறது.

இதற்கிடையே கர்நாடகாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் தலித் மற்றும் பழங்குடியினப் பெண்கள் 263 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.