புதுடெல்லி: இந்தியா முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் 15ஆம் ேததி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த திரையரங்கு களில் பின்பற்றவேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்தும் மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
“திரையரங்குக்கு வருவோர் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டும், ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் திரையரங்கை கிருமி நாசினியால் சுத்தம் செய்யவேண்டும், சமூக இடைவெளி விட்டு இருக்கைகளை அமைக்க வேண்டும்.
“50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அமர அனு மதிக்க வேண்டும், ஓர் இருக்கை இடைவெளிவிட்டு அமரவும் முகக்கவசத்துடன் பார்வையாளர்கள் படம்பார்க்கவும் அனுமதிக்க வேண்டும். படம் பார்க்கும்போது இடையில் எழுந்து வெளியே செல்லக்கூடாது.
“திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி விற்கக்கூடாது,” என 20 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருந்து வருகிறது.
இத்தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவை முறியடிக்க கூட்டம் கூடுவதைத் தடுப்பது மிக முக்கியம் என்பதால் நீண்ட நாட் களாக மூடப்பட்டிருந்த திரையரங்கம் இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.