கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவர் ஒருவர் லண்டனில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங் களை வென்று, பாராட்டுகள் பெற்று வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த மாரத்தான் வீரர் கமலக் ஷா ராவ்(படம்) கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரு வாரம் சிகிச்சை எடுத்துக்கொண்டவர், இரு வாரங்கள் தனிமைப்படுத்திக்கொண்டார்.
தனது 67 வயது முதல் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு வரும் கமலக்ஷா ராவ், கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மீண்டும் முன்புபோல் ஓடமுடியுமா என்ற தயக்கத்துடன் இருந்தார். மருத்துவர்களின் ஆலோசனையுடன் தனது பயிற்சியைத் தொடர்ந்துள்ளார் கமலக்ஷா ராவ். அவரது விடாமுயற்சியால் வெற்றிக் கனி அவரது கைகளில் கிட்டியுள்ளது. கடந்தவாரம் லண்ட னில் நடந்த மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு 7 மணிநேரத்தில் 42 கிலோமீட்டர் ஓடி பதக்கங்களைக் குவித்துள்ளார். ஏற்கெனவே, 100 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஓடியுள்ள இவர், கிருமியால் பாதிக்கப்படவில்லை எனில் தனது கனவான 160 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி கடந்திருப்பேன் என்றும் வருத்தப்பட்டுள்ளார்.