கொரோனா கிருமியின் லேசான அறிகுறிகள் ஏற்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு அடுத்த முறை பாதிப்பு ஏற்பட்டால் மிக மோசமாக இருக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மும்பை மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப அனைத்துலக மையம் உள்ளிட் டவை ஒன்றாக ஆய்வை நடத்தின.
“மீண்டும் ஏற்படும் கொரோனா தொற்று முதலில் ஏற்படுத்திய பாதிப்பைவிட மோசமாக இருக்கும். மோசமான அறிகுறிகளும் நோயும் முதல் முறையைவிட நீண்ட காலம் நீடித்திருக்கும் என கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே குணமடைந்தவர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது,” என ஆய்வறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.