உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த 10 நாட்களில் தொடர்ந்து அதிகரித்தால் 75% விமானச் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என விமானப் போக்கு
வரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். தற்போது அந்த விகிதம் 65 விழுக்காடாக உள்ளது.
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இம்மாதம் 2ஆம் தேதியும் 3ஆம் தேதியும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரமாக இருந்தது. இம்மாத இறுதிக்குள் இது 2 லட்சமாக உயர்ந்து தீபாவளி முதல் டிசம்பருக்குள் 3 லட்சத்தை எட்டும்,” என்றார் அவர். அதேநேரம் அனைத்துலக விமானச் சேவைகள் ‘ஏர் பப்பல்ஸ்’ முறைப்படி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு சில நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதே நிலை அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் வரை தொடரக்கூடும் என்றும் வழக் கமான பயணம் அதுவரை நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் ஹர்தீப் சிங் கூறினார்.
“எந்தவொரு நாடும் இன்னும் முழுமையாக அதன் எல்லைகளைத் திறக்காத நிலையில் அனைத்துலக விமானச் சேவைகள் எப்போது தொடங்கும் என்பதை உறுதியாகக் கணிக்க இயலாது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே எல்லைகளைத் திறக்க நாடுகள் முன்வரும். அதுவரை இப்போதுள்ள நிலைமையே சில மாதங்களுக்குத் தொடரும்,” என்றார் அவர்.