தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் நிறுத்தி வைப்பு: 10 அர்ச்சகர்களுக்குப் பாதிப்பு

1 mins read
c80128cf-8e72-497a-8713-51a464472921
படம்: ஊடகம் -

திரு­வ­னந்­த­புரம்: பத்­ம­நாப சுவாமி கோவி­லைச் சேர்ந்த பத்து அர்ச்­ச­கர்­க­ளுக்கு கொரோனா கிருமி தொற்­றி­யுள்­ளது. இதை­ய­டுத்து அக்­கோ­வி­லில் தரி­ச­னம் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர­டங்கு கார­ண­மாக நான்கு மாதங்­கள் மூடப்­பட்­டி­ருந்த பத்­ம­நாப சுவாமி கோவில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி­தான் திறக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அங்கு பணி­யாற்­றும் பத்து அர்ச்­ச­கர்­கள் உட்­பட 12 பேருக்கு கிருமி தொற்­றி­யது கண்­ட­றி­யப்­பட்­டது. இதன் கார­ண­மாக எதிர்­வ­ரும 15ஆம் தேதி வரை பக்­தர்­கள் கோவி­லுக்கு வரு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ள­தாக கோவி­லின் செயல் அதி­காரி அறி­வித்­துள்­ளார்.

தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டும் கூட கோவில் ஊழி­யர்­கள் உள்­ளிட்ட 12 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

திருப்­பதி கோவி­லில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் பல­ருக்­கும் கூட கிருமி தொற்­றி­யுள்­ள­தாக அண்­மை­யில் தக­வல்­கள் வெளி­யா­கின.

இதே­போல் பூரி ஜெகன்­நா­தர் கோவி­லில் 400க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளுக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்­பது அண்மையில் தெரிய வந்­துள்­ளது.