பீகாரின் புக்சார் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட ‘தலித்’ சமூகத்தைச் சேர்ந்த பெண், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது ஐந்து வயது மகனை அந்தக் கும்பல், கால்வாய்க்குள் வீசிக் கொன்றதாகவும் செய்தி வெளிவந்தது.
கடந்த மாதம் டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததை அடுத்து பெண்ணுரிமை ஆர்வலர்களின் கொந்தளிப்புக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
2019ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒரு நாளுக்கு 87 பாலியல் பலாத்கார சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்வதாக அந்நாட்டின் குற்றவியல் பதிவுத் துறை கடந்த மாதம் தெரிவித்தது.