மின்தடையால் மும்பை நகரம் முடங்கியது

மின்தடையால் மும்பை நகரம் முடங்கியது

2 mins read
952e65b7-524d-40aa-9041-31641fe4f52d
மின்தடையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயிலில் காத்திருக்கும் பயணிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வின் நிதி மைய­மான மும்பை நக­ரில் நேற்று பல மணி நேரம் மின்­தடை ஏற்­பட்­டது. அது முன்­னெப்­போ­தும் இல்­லாத வகை­யி­லான மின்­தடை எனக் கூறப்­ப­டு­கிறது.

மின் இணைப்­புக் கட்­ட­மைப்­பில் ஏற்­பட்ட பழுதே மின்­த­டைக்­குக் கார­ணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது. இரு­பது மில்­லி­யன் பேர் வசிக்­கும் மும்­பை­யில் இது­போன்ற பெரிய அள­வி­லான மின்­தடை ஏற்­படு­வது அரிது.

மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்ட பெரும்­பா­லான இடங்­களில் மக்­கள் பெரும் அவ­திக்­குள்­ளா­கி­னர்.

மின்தடை­யால் உள்­ளூர் ரயில் சேவை, இணை­ய­ம்வழி வகுப்­பு­கள், தேர்­வு­கள் போன்­றவை பாதிப்பு அடைந்தன. பல்வேறு பகுதிகளிலும் ரயில்கள் ஆங்காங்கே நின்று விட்டதால் பயணிகள் கீழே இறங்கி நடந்து சென்றனர்.

நேற்றுத் தொடங்­கிய கல்லூரி பொது நுழைவுத் தேர்­வு­கள் ஜென­ரேட்­டர் வச­தி­யு­டன் நடை­பெற்­றன. இருப்­பி­னும், பெரும்­பா­லான கல்­லூ­ரி­களின் இறுதி ஆண்­டுத் தேர்­வு­கள் பாதிக்­கப்­பட்­டன. இத­னால், பல கல்­லூ­ரி­களில் தேர்வுகள் ஒத்­தி­வைக்­கப்­பட்டுள்­ளன.

மும்பை உயர் நீதி­மன்­றத்­தில் காணொளிக் காட்சி மூலம் நடை­பெற்று வந்த வழக்கு விசா­ர­ணை­களும் மின்தடை­யால் பாதிக்­கப்­பட்­டன.

மேலும், மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் மின்­தடை ஏற்­பட்­டது குறித்து பல­ரும் சமூக ஊட­கங்­களில் கவலை தெரி­வித்­த­னர்.

ஆனால், விமான நிலைய செயல்­பா­டு­களில் எந்­தத் தடங்­க­லும் இல்லை என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அதே­போல, இந்­தி­யா­வின் இரு முக்கிய பங்­குச்­சந்­தை­களிலும் பாதிப்பு எது­வும் ஏற்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

மும்பை மாந­க­ரில் பெரும்­பாலான பகு­தி­களில் இந்­திய நேரப்­படி நேற்று காலை 10 மணிக்கு ஏற்­பட்ட மின்­தடை பகுதி பகு­தி­யாக மாலை 5 மணி­ய­ள­வில் திரும்­பி­ய­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

மின்­தடை குறித்து விசா­ரிக்க மகா­ராஷ்­டிர முதல்­வர் உத்­தவ் தாக்கரே உத்­த­ர­விட்­டுள்­ளார்.