வங்கிக்கு சென்ற பெண்ணை எழுவர் கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமை; குளத்தில் வீசிய மகன் பலி

வங்கிக்கு சென்ற பெண்ணை எழுவர் கும்பல் கடத்தி பாலியல் வன்கொடுமை; குளத்தில் வீசிய மகன் பலி

2 mins read
6f138a04-1c7d-4ca1-80c8-87a791b557b6
-

தனது மக­னு­டன் வங்­கிக்கு நடந்து சென்­று­கொண்­டி­ருந்த தலித் வகுப்­பைச் சேர்ந்த பெண்­ணைக் கடத்­திய ஏழு பேர் கொண்ட கும்­பல், அப்­பெண்ணை பாலி­யல் வன்­கொ­டுமை செய்தது.

அத்துடன், உண்மை வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக தாயை­யும் மகனையும் அரு­கில் இருந்த குளத்­திலும் தூக்கி வீசி­உள்­ள­னர்.

பீகார் மாநி­லம், புக்­ஸர் மாவட்­டத்­தில் உள்ள ஒசாகா பரான் என்ற கிரா­மத்­தில் வசித்து வரும் பெண், தனது ஐந்து வயது மக­னு­டன் பக்­கத்து கிரா­மத்­தில் இருக்­கும் வங்­கிக்கு நடந்து சென்­றுள்­ளார்.

அப்­போது அவர்­கள் எதிரே வந்த கும்­பல் ஒன்று, அந்­தப் பெண்­ணை­யும் அவ­ரின் ஐந்து வயது மக­னை­யும் கடத்­திச் சென்று கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

நடந்த சம்­ப­வத்தை பெண் வெளியே சொல்­லி­வி­டக் கூடாது என்­ப­தற்­காக பெண்­ணை­யும் அவ­ரின் ஐந்து வயது குழந்­தை­யை­யும் குளத்­தில் தூக்கி வீசி­னர்.

இதற்கிடைேய, 28 வயதான தனது மகளைக் காணவில்லை என்று பெண்­ணின் தந்தை பக்­சா­ரில் உள்ள முரார் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து இந்தச் சம்­ப­வம் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

தனது மகள் தன் பேரனு­டன் சனிக்­கி­ழமை வங்கிக்குச் சென்ற தாக­வும் ஆனால், அதன்­பிறகு அவர்கள் திரும்பி வரவே இல்லை என்­றும் தந்தை புகாரில் கூறி­யிருந்­தார்.

அதன்­பி­றகு, தாய்-மகன் இரு­வ­ரை­யும் அந்­தக் கிரா­மத்­தில் உள்ள ஒரு குளத்­தின் அரு­கில் ஞாயிறு அதிகாலை 3 மணி அள­வில் கண்டுபிடித்தனர்.

பெண்­ணின் ஆறு வயது மகன் குளத்தில் மிதந்த நிலை­யில் காணப் பட்ட­தா­க­வும் முரார் காவல் நிலைய அதி­காரி மனோஜ் குமார் பதக் கூறி­னார்.

பெண்ணைக் கண்டுபிடித்த நிலையில், தனது மகள் ஏழு பேரால் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்பட்­ட­தா­க­வும் மக­ளின் கண் முன்­னால் மகனை ஆற்­றில் தூக்கி வீசிக் ெகான்­றுள்ளதாக­வும் பெண்­ணின் தந்தை போலிசாரிடம் கூறி­னார்.

இந்­தச் சம்­ப­வத்­தில் தொடர்பு டைய அடை­யா­ளம் தெரிந்த இரு­வர் மீதும் அடை­யா­ளம் தெரி­யாத ஐவர் மீதும் பெண்­ணின் தந்தை குற்றம்சாட்டினார்.

நீரஜ் குமார் சிங் என்ற போலிஸ் அதி­காரி கூறும்­போது, "சதார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட பெண்­ணின் நிலைமை சீராக உள்­ளது.

"மீனா ராம், 50, என்ற குற்­ற­வாளி கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

"பெண் அதிர்ச்சி அடைந்த நிலை­யில் உள்­ளார். தெளி­வாக அவ­ரால் எது­வும் பேச­மு­டி­ய­வில்லை.

"அவ­ரது கண­வ­ரு­டன் அவர் நல்ல ஓர் உறவு முறை­யில் இல்லை. கடந்த ஒன்­றரை ஆண்­டாக அவர் தனது பெற்­றோ­ரு­டன்தான் வசித்து வரு­கி­றார்," என்று கூறி­னார்.