தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுஷாந்துடன் பணப்பரிமாற்றம்: திரைப்பட இயக்குநர் வீட்டில் அதிரடி சோதனை

1 mins read
8da24151-0923-4bc0-856d-71efe5e136d7
படம்: ஊடகம் -

மறைந்த நடி­கர் சுஷாந்த் சிங்­கின் மரண வழக்கு தொடர்­பான விசா­ரணை தீவி­ர­ம­டைந்து வரு­கிறது. இந்­நி­லை­யில் பிர­பல இந்தி திரைப்­பட இயக்­கு­நர் தினேஷ் விஜன் வீட்­டில் அம­லாக்­கத் துறை­யி­னர் நேற்று அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.

சுஷாந்த் சிங்­கிற்கு போதைப் பொருள் பயன்­ப­டுத்­தும் பழக்­கம் இருந்­த­தாக கூறப்­ப­டு­கிறது. அவ­ரி­டம் பணம் பெற்று பலர் மோசடி செய்­து­விட்­ட­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யா­னது. இது குறித்து தீவி­ர­மாக விசா­ரிக்க வேண்­டும் என அவ­ரது குடும்­பத்­தார் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இயக்­கு­நர் தினே­ஷுக்­கும் சுஷாந்­த் சிங்கிற்கும் இடையே ஏதே­னும் பணப்பரி­மாற்­றங்­கள் நிகழ்ந்­த­னவா என அம­லாக்­கத்­துறை விசா­ரிக்­கிறது.

சுஷாந்த் சிங்கை வைத்து இரண்டு படங்­களை இயக்க ஒப்­பந்­தம் போட்­டி­ருந்­தார் இயக்­கு­நர் தினேஷ். ஆனால் முதல் பட­மான 'ராப்தா' வெளி­யான பிறகு அடுத்த படத்­துக்­கு­ரிய பணி­கள் துவங்­கப்­ப­ட­வில்லை.

இது குறித்து கடந்த மாதமே தினே­ஷி­டம் சுமார் எட்டு மணி நேரம் விசா­ரணை நடை­பெற்­றது. அப்­போது இரண்­டா­வது படம் ஏன் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை என அவ­ரி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில் இரு­வ­ருக்­கும் இடை­யே­யான ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் எத்­த­கைய பணப்­பரி­மாற்­றங்­கள் நிகழ்ந்­துள்­ளன என்­பதை அறிய அம­லாக்­கத்­துறை நேற்று தினேஷ் வீட்­டில் அதி­ரடி சோதனை மேற்­கொண்­டது.

இதே போல் சுஷாந்த் சிங்குடன் பணப்­ப­ரி­மாற்­றங்­களில் ஈடு­பட்ட மேலும் பல­ரி­டம் அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­தும் எனத் தெரி­கிறது.