கொவிட்-19: அறிகுறிகள் இல்லாமலேயே உயிரிழந்த 43 பேர்

கொவிட்-19: அறிகுறிகள் இல்லாமலேயே உயிரிழந்த 43 பேர்

1 mins read
1d7f6464-7b2b-4939-95a6-9d78258d0e16
ஊரடங்குத் தளர்வுகளில் ஒன்றாக நாடு முழுவதும் நேற்று முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதித்துள் ளது. இதை யடுத்து பல மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.படம்: ஏஎப்பி -

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இல்­லா­ம­லேயே 43 பேர் உயி­ரி­ழந்­தி­ருப்­பது பெங்­க­ளூ­ரு­வில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

கிரு­மித்­தொற்­றால் கர்­நா­டக மாநி­லம் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு கடந்த செப்­டம்­பர் வரை 2,316 பேர் கொவிட் -19 நோய்க்­குப் பலி­யாகி உள்­ள­னர். இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு இதய நோய், நீரி­ழிவு நோய் உள்­ளிட்ட பிரச்­சி­னை­கள் இருந்­துள்­ளன.

அதே­வே­ளை­யில் காய்ச்­சல், இரு­மல் உள்­ளிட்ட கொரோனா அறி­கு­றி­க­ளு­டன் சிகிச்சை பெற்ற 620 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கிரு­மித்­தொற்­றுக்­கான எந்­த­வித அறி­கு­றி­களும் இல்­லா­ம­லும் மற்ற நோய்­கள், உடல்­நல பாதிப்­பு­கள் இல்­லா­ம­லும்­கூட 43 பேர் உயி­ரி­ழந்­தி­ருப்­பது தெரி­ய­வந்துள்­ளது.

அறி­கு­றி­கள் இல்­லா­மல் கொரோனா கிருமி தொற்­றி­யி­ருந்­தால் அச்­சம் கொள்­ளத் தேவை­யில்லை என மருத்­து­வர்­கள் கூறி­வரும் நிலை­யில், பெங்­க­ளூ­ரில் மட்­டும் அறி­கு­றி­கள் இல்­லாத 43 பேர் பலி­யாகி இருப்­பது மக்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இதற்­கி­டையே இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 7.3 மில்­லி­ய­னைக் கடந்­துள்­ளது.

இவர்­களில் 6.38 மில்­லி­யன் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். மரண எண்­ணிக்கை 111,266 ஆக அதி­க­ரித்­துள்­ளது. உயி­ரி­ழப்பு விகி­தம் 1.52 விழுக்­கா­டா­க­வும் குண­ம­டைந்­தோர் விகி­தம் 87.36 விழுக்­கா­டா­க­வும் உள்­ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.