போதைப்பொருள் விவகாரம்: இந்தி நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் அதிரடி சோதனை

1 mins read
d89856ed-1ef8-4f8b-a37e-f5f62106b8cc
-

புது­டெல்லி: போதைப்­பொ­ருள் வழக்­கில் கைதா­கி­யுள்ள கன்­னட நடிகை ராகினி அளித்த தக­வ­லின் பேரில் நடி­கர் விவேக் ஓப­ராய் (படம்) வீட்­டில் மும்பை போலி­சார் நேற்று முன்தினம் அதி­ரடிச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

இந்­நி­லை­யில், முதுகு வலிக்காக ராகினி, சிறை­யின் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்றதாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

மும்பை திரை­யு­ல­கத்­தைப் போலவே கன்­ன­டத் திரை­யு­ல­கைச் சேர்ந்த பல­ருக்­குப் போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தும் பழக்­கம் இருப்­ப­தாக அண்­மை­யில் பர­ப­ரப்­புத் தக­வல் வெளி­யா­னது. இது­கு­றித்து விசா­ரணை நடத்­திய போலி­சார் நடி­கை­கள் ராகினி, சஞ்­சனா கல்­ராணி ஆகிய இரு­வ­ரை­யும் கைது செய்­த­னர். இந்­நி­லை­யில் ராகி­னி­யி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யின்­போது அவர் பல்­வேறு முக்­கி­யத் தக­வல்­க­ளைக் கூறி­ய­தா­கத் தெரி­கிறது.

அவற்­றின் அடிப்­ப­டை­யில் நேற்று மும்­பை­யில் உள்ள பிர­பல நடி­கர் விவேக் ஓப­ராய் வீட்­டில் மத்­திய குற்­றப்­பி­ரிவு போலி­சார் அதி­ரடிச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

போதைப் பொருள் வழக்­கில் சிக்­கி­யுள்ள அவ­ரது மைத்­து­னர் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­காது தலை­ம­றை­வாக உள்­ள­தால் விவேக் வீட்­டில் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக தெரி­கிறது.