தலையிடாதீர்: சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்து

தலையிடாதீர்: சீனாவுக்கு இந்தியா அறிவுறுத்து

1 mins read

ஒவ்­வொரு நாடும் பிற நாடு­க­ளி­டம் எதிர்­பார்ப்­பது போல, இந்­தி­யா­வும் அதன் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் பிற நாடு­கள் கருத்து சொல்­லா­மல் இருக்­கும் என நம்­பு­வ­தாக மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை செய்தித் தொடர்­பா­ளர் அனு­ராக் ஸ்ரீவத்­சவா தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்­தி­யா­வின் உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் கருத்து தெரி­விக்க சீனா­வுக்கு எந்த உரி­மை­யும் இல்லை என்­றார்.

"ஜம்மு காஷ்­மீர் மற்­றும் லடாக் யூனி­யன் பிர­தே­சங்­கள் இந்­தி­யா­வின் ஒருங்­கி­ணைந்த பகு­தி­யாக இருந்­தன, இப்­போ­தும் இருக்­கின்­றன, இனி­யும் இருக்­கும்.

"அதே போல் அரு­ணா­ச­லப் பிர­தே­சம் இந்­தி­யா­வின் ஒருங்­கி­ணைந்த மற்­றும் மாற்ற முடி­யாத பகுதி ஆகும். இந்த உண்­மையை உயர்­மட்ட ரீதி­யில் உள்­பட பல்­வேறு நிகழ்­வு­களில் சீனா­வுக்கு தெளி­வு­ப­டுத்தி இருக்­கி­றோம்," என்­றார் அனு­ராக் ஸ்ரீவத்­சவா.

முன்­ன­தாக லடாக் என்­பது இந்­தி­யா­வால் உரு­வாக்­கப்­பட்ட ஒரு பகுதி என்று சீன தரப்­பில் விமர்­சிக்­கப்­பட்டு இருந்­தது.

மேலும் லடாக்­கை­யும் அரு­ணா­ச­லப் பிர­தே­சத்­தை­யும் சீனா அங்­கீ­க­ரிக்­க­வில்லை என அந்­நாட்டு வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

இதற்கு இந்­தியா தற்போது திட்டவட்டமான பதி­லடியைக் கொடுத்­துள்­ளது.