இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 300 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி தயாராகி விடும், என்று பிரபல மருந்து நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் இணைந்து உருவாக்கவிருப்பதாக ஊடக அறிவிப்புகள் குறிப்பிடுகின்றன.
இந்த தடுப்பூசியின் சோதனையை நடத்திய பின்னர் அதனை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.